2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

திருமலையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Freelancer   / 2023 ஒக்டோபர் 05 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மகமாயப்புரம் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் நேற்று மாலை (04) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் போதை பழக்கம் உடையவர் என்றும் கேரளா கஞ்சாவை உபயோகிக்கும் நோக்கில் அவரது உடமையில் மறைத்து வைத்திருந்த நிலையில்  பொலிஸார் கைது செய்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 420 மில்லிகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் கைது செய்யப்பட்டவர் 34 வயதுடையவர் என்றும் கைது செய்யப்பட்டவரையும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவையும் இன்றையதினம் (05) திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏ எம் கீத் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X