Princiya Dixci / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட், ஹஸ்பர் ஏ ஹலீம், ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை - கிண்ணியா, சுங்கான் குழி குளத்தில் மீன்பிடிக்க நேற்றிரவு (10) தோணியில் சென்ற வயோதிபர் ஒருவர் தோணி கவிழ்ந்து காணாமல் போயிருந்தார்.
இவ்வாறு காணாமல்போயிருந்த கிண்ணியா, நடு ஊற்று பகுதியைச் சேர்ந்த அப்துல் முத்தலிப் அப்துல் சலாம் (வயது -78) என்பவர், இன்று (11) அதிகாலை மேற்படி குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம், கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025