2026 மார்ச் 25, புதன்கிழமை

நெல் வியாபாரிக்கு விளக்கமறியல்

Gavitha   / 2016 ஜனவரி 22 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

11 இலட்சம் ரூபாய் நிதி மோசடிச் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட யநெல் வியாபாரியொருவரை, எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரி, கந்தளாய் நீதிமன்ற நீதவான் ருவான் திஸாநாயக்க வியாழக்கிழமை (21) உத்தரவிட்டார்.

பொலன்னறுவை, பன்சலகொடல்ல, உடஉலகட்டுவ, பகுதியைச் சேர்ந்த ஹேரத் முதியான்சலாகே சுரேஸ்குமார ஹேரத் வயது (32) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டைடுத்து, அவர் கடந்த புதன்கிழமை (20) கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .