Editorial / 2020 மார்ச் 12 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.நௌபர்
மூதூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மூதூர், புளியடிச்சந்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபுரம், நீண்டகாலமாக இயங்காது பழுதடைந்து காணப்படுகின்றது. இந்த மணிக்கூட்டுக் கோபுரத்தை புனரமைக்க உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேற்படி மணிக்கூட்டுக் கோபுரம் அமையப்பட்டுள்ள இடத்துக்கு அருகில் பாடசாலைகள், மயானம், பஸ் தரிப்பு நிலையம் என்பன அமைந்துள்ளதோடு, அதிக சன நடமாட்டமுள்ள இடமாகவும் உள்ளது.
எனவே, இதனை இயங்கச்செய்வதன் மூலம் பொதுமக்கள் சரியான நேரத்தை அறிந்து செயற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கும் பொதுமக்கள், அதிகாரிகளை கவனமெடுக்குமொறு கோரிக்கை விடுக்கின்றனர்.
1 hours ago
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
03 Feb 2026