2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

பதவியேற்பு நிகழ்வு

Niroshini   / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்,ஏ.எம்.ஏ.பரீத்,எஸ்.சசிக்குமார்

இன்னர் வீல் கழகத்தின் 14ஆவது தலைவியாக  கௌஷி ஞானகுனாளன் பதவியேற்கும் நிகழ்வு  நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை டைக் வீதியில் உள்ள றோட்டரி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கிழக்கு மாகாணத்தின் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்  வளர்மதி ரவீந்திரன்,கெளரவ அதிதியாக றோட்டரிக் கழகத்தின் தலைவர் கிறிஸ்ரி  ஐபோ மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது,திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு ஒரு தொகுதி ஊன்றுக்கோல்கள்,பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவி தொகை மற்றும் விதவைகளுக்கு வாழ்வாதார உதவிகள் என்பன வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .