2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

பயிற்சிக் கருத்தரங்கு

Niroshini   / 2016 ஜனவரி 19 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                    

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் கடமையாற்றும் புனர்வாழ்வு உத்தியோகத்தர்களுக்கான மனநோய் சம்பந்தமான ஒரு நாள் பயிற்சிக் கருத்தரங்கு இன்று செவ்வாய்கிழமை சிறைச்சாலை பயிற்சிக் கல்லூரியில் சிறைச்சாலை அதிகாரி ஆர்.இராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.        

இதில் புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் முப்பத்தைந்து பேர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மனநோய் என்றால் என்ன? அது ஒரு மனிதனுக்கு எவ்வாறு மனநோய் ஏற்படுகின்றது போன்ற விடயங்கள் ஆராயப்பட்டதோடு குழுக்களாக பிரித்து மனநோய் பற்றியும் சிறைச்சாலைகளில் இருக்கும் கைதி ஒருவருக்கு மனநோய் ஏற்படுமிடத்து எவ்வாறு புனர்வாழ்வு அளித்து போதனை மேற்கொள்வது போன்ற விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டன.         

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .