2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாரம்பரிய உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு

Princiya Dixci   / 2021 ஜூலை 12 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீட், ஒலுமுதீன்  கியாஸ், அ.அச்சுதன்

திருகோணமலை மாவட்டச் செயலக வளாகத்தில் பாரம்பரிய உணவு விற்பனை நிலையம், இன்று (12) திறந்து வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் தர்சன பாண்டிகோராளவின் தலைமையில், இந்தப் பாரம்பரிய உணவு விற்பனை நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த உணவு விற்பனை நிலையம் ஊடாக இடியப்பம், ரொட்டி மற்றும் இட்லி உள்ளிட்ட பல வகையான உணவு வகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் உட்பட பதவி நிலை உத்திதோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .