தீஷான் அஹமட் / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் குழுவொன்று, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பு, அமைச்சரின் அலுவலகமான அக்கரைப்பற்றிலுள்ள கிழக்கு வாசலில் நேற்று (17) இரவு நடைபெற்றுள்ளது.
இதன்போது, யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, முழுமையான இடம்பெயர்வை எதிர்நோக்கிய தோப்பூர் பிரதேசம், அபிவிருத்தி விடயத்தில் பின்தங்கி காணப்படுவது தொடர்பாகவும், எதிர்கால அபிவிருத்த்தித் திட்டங்கள் விடயமாகவும் கலந்துரையாடப்பட்டன.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின் தோப்பூர் பிரதேச அபிவிருத்தி விடயத்தில் உரிய கவனம் செலுத்தப்படுமென, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, தோப்பூர் பிரதேச புத்திஜீவிகளிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.
28 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago