2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

போதை மருந்துகளை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பகுதிக்கு, இரசாயனம் கலந்த போதை மருந்துகளை, மூன்று பொதிகளில் கொண்டு சென்ற நபரை, இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டார்.

ரயில் நிலைய வீதி, மன்னார் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

சந்தேகநபர், இரசாயனம் கலந்த போதைபொருளை, மன்னாரிலிருந்து மூதூர் பகுதிக்கு ஓட்டோவில் கொண்டு சென்ற போதே, மூதூர் போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேகநபர் பயன்படுத்திய ஓட்டோ, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X