2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

மோட்டார்சைக்கிள் தடம்புரண்டதில் இளைஞர்கள் காயம்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி

மூதூர் - மட்டக்களப்பு வீதியிலுள்ள தோப்பூர் தயிர்வாடியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7.00 மணியளவில் மோட்டார்சைக்கிள் தடம்புரண்டதில் தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞர்கள் இருவரும் ஜின்னா நகர் பிரதேசத்திலுள்ள தமது குடும்ப உறவினர்களை சந்தித்து விட்டு, திரும்பி வரும் போது நாய் ஒன்று வீதிக்கு குறுக்காக பாய்ந்துள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞன் தடுமாறி  மோட்டார்சைக்கிளை மறு திசைக்கு திருப்ப முற்பட்ட மோது மோட்டார்சைக்கிள் வீதியை விட்டு விலகி தடம்புரண்டதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .