2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் செயற்பாடு

Niroshini   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு மஞ்சள் கடவையினால்  செல்லும் முறைமை மற்றும் போக்குவரத்து தொடர்பான விடயங்கள் குறித்து விளக்கமளிக்கும் செயற்பாட்டு நிகழ்வு இன்று புதன்பகிழமை காலை மகாதிவுள்வெவ சிங்கள மகா  வித்தியலயத்துக்கு முன்னால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி தம்மிக விஜயசிங்கவின் வேண்டுகோளின் படி போக்குவரத்து பொலிஸார் பிரதி புதன்கிழமை தோறும் இச்செயல்முறை பயிற்ச்சியை வழங்கவுள்ளனர்.

அத்துடன் சிறுவர்களின் உரிமைகள்,பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான செயலமர்வுகளை கிராமங்கள் தோறும் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .