2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

முன்னறிவித்தல் இன்றி மின்சாரம் துண்டிப்பு : கந்தளாய் மக்கள் விசனம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 16 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                 

திருகோணமலை கந்தளாய் மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.        

கந்தளாய் பிரதேசத்தின் பேராறு,மத்ரஸா நகர்,பொட்டம்காடு,மற்றும் அணைக்கட்டு போன்ற பிரதேசங்களில்  முன்னறிவித்தல் இன்றி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் நெல் ஆலை சொந்தக்காரர்களும் சிறுகைத்தொழில்களை மேற்கொள்வோரும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும்,மாணவர்கள் பரிட்சைகளை எதிர்நோக்கி வருகின்ற இத்தருணத்தில் மின்சாரத் தடைகள் ஏற்படுவதால் கல்வியில் வீழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய நிலை உருவாகியுள்ளது.

எனவே,கந்தளாய் மின் பொறியியலாளர் அலுவலகம் இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7