2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மணல் ஏற்றிய நால்வர் கைது

Kogilavani   / 2015 நவம்பர் 20 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற நால்வரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மணல் ஏற்றுவதற்காக பயன்படுத்திய இரண்டு டிப்பர் வாகனங்கள்; மற்றும் இரண்டு உழவு இயந்திரங்களை கிண்ணியா பொலிஸார் இன்று(20) கைப்பற்றியுள்ளனர்.

கிண்ணியாவில் மஜீத் நகர், பூவரசந்தீவு, உப்பாறு ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகள் மணல் அகழ்வதற்கு அனுமதிக்கப்ட்ட பிரதேசங்களாகும்.

இதில் மண் அகழ்வதற்காக ஒரு பிரதேசத்தில் அனுமதி எடுத்துவிட்டு அந்த அனுமதியை வைத்து இன்னொரு பிரதேசத்தில் மணல் எடுத்துச் சென்றமையினாலே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .