Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 12 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம், ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்துக்குக் கீழ் நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிய நால்வர், நேற்று (11) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனரென, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர்கள் வருகை தந்த 4 உழவு இயந்திரங்களுடன் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளனர்.
கிண்ணியா, காக்காமுனை, இடிமன், மஹ்ரூப் நகர் மற்றும் மஹமாறு போன்ற கிராமங்களைச் சேர்ந்த 25 - 30வயதுக்கு உட்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
உழவு இயந்திரங்களுடன், கைதுசெய்யப்பட்ட நான்கு பேரையும் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் சந்தேகநபர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 May 2025
12 May 2025