2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மாமா, மருமகனுடன் மூவர் கைது

Editorial   / 2017 நவம்பர் 14 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை, அபயபுர சந்தியில் கேரளாக் கஞ்சாவைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மாமா, மருமகன் உட்பட மூவர், இன்று (14) காலை 10 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஜ.ஜனூஷன் தெரிவித்தார்.

வழங்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்து, இம்மூவரையும் சோதனையிட்ட போது, மூவரிடமும் தலா 2 கிராம் வீதம் 6 கிராம் கேரளாக் கஞ்சா கைப்பற்றப்பட்டதெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாலையூற்று பகுதியைச் சேரந்த  50, 24 வயதுகளையுடைய மாமாவும் அவரது மருமகனும் மற்றும் கிராந்துரை, போகம்பிட்டிய பகுதியைச் 25 வயதுடைய பிறிதொரு நபருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட மூவரும், திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், அவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை திருகோணமலை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X