ஏ.எம்.ஏ.பரீத் / 2019 ஜனவரி 28 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் 71ஆவது தேசிய தினத்தையொட்டி, திருகோணமலை - மூதூரில் சேவையாற்றி வருகின்ற மதார் நம்பிக்கை நிதியத்தால், “உதிரம் கொடுத்து, உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில், மாபெரும் இரத்த தான முகாம், மூதூர் தள வைத்தியசாலையில், பெப்ரவரி 4ஆம் திகதி காலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதார் நம்பிக்கை நிதியத்தால் மூன்றாவது தடவையாக நடத்தப்படுகின்ற இரத்த தான முகாமில் கலந்துகொண்டு, இரத்த தானம் செய்ய விரும்புவோர் 0773077736, 0754323451 எனும் அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .