2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

யானைத்தந்தங்களை கொண்டுசென்ற நால்வருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                     

அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவிலிருந்து இரண்டு  யானைத்தந்தங்களை திருகோணமலைக்குச் கொண்டுசென்றதாகக் கூறப்படும் நான்கு பேரையும் இம்மாதம் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவெளி நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை(11) உத்தரவிட்டுள்ளது.                                  

வான் ஒன்றில் திருகோணமலைக்கு கொண்டுசென்றபோது தென்னைமரவாடி சந்தியில் நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்ட இவர்கள் புல்மோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சந்தேக நபர்கள் நால்வரும் இரண்டு யானைத்தந்தங்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வான் புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7