2026 மார்ச் 23, திங்கட்கிழமை

ரயிலில் மோதி இளைஞன் பலி

Niroshini   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசிம்

திருகோணமலையிலிருந்து சீனக்குடாவிலுள்ள சீமெந்து தொழிற்சாலை நோக்கி சென்ற ரயிலுடன் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை,பாலையூற்று கிராமத்தைச் சேர்ந்த றியாஸ் மொஹமட் ரினாஸ் (வயது 18) என்ற இளைஞனே இன்று திங்கட்கிழமை இவ்வாறு ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் காதில் எட்போன் அணிந்துகொண்டு தண்டவாளத்தில் சென்றுக்கொண்டிருந்த போதே பின்னால் வந்த ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .