2024 மே 17, வெள்ளிக்கிழமை

ரோட்டராக்ட் கழகத்தால் சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு

Janu   / 2023 ஜூன் 05 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை ரோட்டராக்ட் கழகத்தினர்  ஜூன் மாதம் நான்காம் திகதி திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இரண்டு சக்கர நாற்காலிகளை அன்பளிப்பு செய்தனர்.

இந்நிகழ்வில் ரோட்டராக்ட் கழகத்தின் தலைவர் அஜந்திக்கா, செயற்திட்ட தலைவர் அபிநயா ரகுராம் ஆகியோருடன் வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. ஜகத் விக்ரமரத்ன அவர்களும் ரோட்டரி கழகத்தின் சார்பில் இலங்கை மத்திய வங்கியின் கிழக்கு மாகாண பிரதேச முகாமையாளர் திரு. க. பிரபாகரன் அவர்களும் இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண சந்தைப்படுத்தல் அதிகாரி ந. து. ரகுராம் அவர்களும்  கலந்து சிறப்பித்திருந்தனர்.

செய்தித்தாள்களில் சக்கர நாற்காலிகள் தேவை குறித்த செய்தியின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .