2026 மார்ச் 23, திங்கட்கிழமை

வெடிப்பொருள் வைத்திருந்தவருக்கு அபராதம்

Niroshini   / 2015 நவம்பர் 04 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்எம்.யாசீம்

மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்திய ஹக்கபட்டஸ் வெடிபொருளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபருக்கு திருகோணமலை நீதிமன்ற நீதவான் கயான் மீ கஹகே நேற்று செவ்வாய்க்கிழமை 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

கன்தளாய்- 14 கொலனி இல-823 வசித்து வந்த ஹேரத் முதியன்சலாகே பேமதாஸ (வயது 48) என்பவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19ஆம் திகதி நாமல்வத்த 04ஆம் கட்டைப்பகுதியில் ஹக்கபடஸ் வெடிபொருளை பயன்படுத்தி மிருகங்களை வேட்டையாடி வருவதாக புலனாய்வுத்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .