2025 ஜூன் 09, திங்கட்கிழமை

விண்ணப்பம் கோரல்

Niroshini   / 2015 நவம்பர் 09 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி

மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி, புதிய மாணவர் அனுமதிக்காக விண்ணப்பம் கோரியுள்ளது.

அல் குர்ஆனை சரளமாக ஓதக்கூடி, 2016ஆம் ஆண்டில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கத் தகுதியுடைய, நல்லொழுக்கமும் கல்வி கற்பதில் விருப்பமுடைய மாணவர்கள் ஷசரீஆப் பிரிவுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இதேவேளை,அல் குர்ஆனை சரளமாக ஓதக்கூடி, மனனம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்ற, 2016ஆம் ஆண்டில் 6ஆம் தரத்துக்கு தகுதியுடைய,   நல்லொழுக்கமும் கல்வி கற்பதில் விருப்பமுடைய மாணவர்கள் அல்குர்ஆன் மனனப் பிரிவுக்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்க விரும்புவோர்  அதிபர், நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி, அரபுக்கல்லூரி வீதி, மூதூர் எனும் முகவரியில் தொடர்பு கொண்டு விண்ணப்பப்படிவங்களைப் பெற்று எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு 026-2238329/077-9360485/077-9359624/075-2624712 எனும் கையடக்க அலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொள்ளமுடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .