2025 ஜூன் 09, திங்கட்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Gavitha   / 2015 நவம்பர் 07 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்                      

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்றதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ளையிலிருந்து வந்த வேனுடன் கந்தளாய் நகருக்குச் சென்ற மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இவ்வாறு படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .