2025 ஜூன் 09, திங்கட்கிழமை

விபத்தில் கணவன்,மனைவி காயம்

Niroshini   / 2015 நவம்பர் 02 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி

திருகோணமலை-மட்டக்களப்பு வீதியிலுள்ள மூதூர்-மல்லிகைத்தீவு பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை பகல் 2 மணியளவில் மோட்டார் சைக்கிள் மாடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி இருவரும் படுகாயமடைந்த நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மூதூர் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எம்.தாயூன் (வயது 53),டீ.ஆரிபா (வயது 50) ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.

உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் செல்லும் போது மல்லிகைத்தீவு பிரதான வீதியின் குருக்கே மாடு ஒன்று திடீரென குறுக்கருத்தமையினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .