2026 மார்ச் 23, திங்கட்கிழமை

விபத்தில் சாரதி படுகாயம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை புத்தளம் பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கெப் வண்டியும் சிறிய உழவு இயந்திரமும் மோதி விபத்துக்குள்ளானதில் உழவு இயந்திரத்தின் சாரதியான திருகோணமலை,மஹாதிவுள்வௌ பகுதியைச் சேர்ந்த டி.ஐி.றஐித் சன்கேத் (வயது 23) என்பவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

அநுராதபுரம் பகுதியிலிருந்து வேகமாக வந்த கெப் வாகனத்துடன் உள்ளக வீதியினூடாக வந்த உழவு இயந்திரம் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நபர் மஹாதிவுள்வௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .