2026 மார்ச் 19, வியாழக்கிழமை

வடிசாரயம் காய்ச்சிய சந்தேகநபர் கைது

தீஷான் அஹமட்   / 2017 டிசெம்பர் 27 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - மல்லிகைத்தீவு, மனைச்சேனைப் பகுதியில் வடிசாராயம் காய்ச்சப்படும்  இடம் முற்றுகையிடப்பட்டதுடன், 55 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் ஒருவரையும் மூதூர் பொலிஸார் நேற்று (26) கைது செய்துள்ளனர்.

குறித்த சுற்றி வளைப்பின்போது, 50 ஆயிரம் மில்லி லீற்றர் வடிசாராயமும், வடிசாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் கோடா 55 ஆயிரம் மில்லி லீற்றர் மற்றும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .