தீஷான் அஹமட் / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த படிரக வாகனமொன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, தோப்பூர் சந்தியில் தூண்னொன்றில் மோதி, வாய்க்காலில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானது.
இன்று (24) காலை இடம்பெற்ற இவ்விபத்தில், வாகனச் சாரதி படுகாயமடைந்த நிலையில், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றாரென, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில், மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .