Janu / 2024 மே 30 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் , பாலத்தோப்பூர் பகுதியிலுள்ள வாய்க்காலுக்குள் வேன் ஒன்று தடம் புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் வியாழக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது .
இதன்போது வேன் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன் அவர் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.
மூதூரிலிருந்து தோப்பூருக்குச் சென்று திரும்பும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .
மேலும் , இவ் விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
தீஷான் அஹமட்


01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026