2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

வெற்றுக் காணியில் வெடிக்காத குண்டு

Editorial   / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெடியாவ வடக்குப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வெற்றுக் காணியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் குண்டு,  தம்பலகாமம் விசேட பொலிஸ் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (06) மாலை  மீட்கப்பட்டுள்ளது.

கந்தளாய் நீதிமன்ற நீதவானின் அனுமதியின் பின் குறித்த மோட்டார் குண்டை செயலிழக்க வைப்பது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X