Janu / 2024 ஏப்ரல் 22 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தளாய், ரஜஎல பிரதேசத்தில், ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற வேன் விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
கந்தளாய், ரஜஎல நான்காம் யூனிட் பகுதியை சேர்ந்த , கந்தளாய் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஜே . எம் . ஜீ . ஹசினி பிரபோதனி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் அவர் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பெறுபேறுகளுக்காகக் காத்திருந்தவர் என தெரியவந்துள்ளது .
குறித்த மாணவி தனது உறவினர் வீட்டில் இருந்து தனது வீட்டிற்க்கு நடந்து சென்றுக் கொண்டிருந்த போது பின்னால் வந்த வேன் வேக கட்டுப்பாட்டை இழந்து, அருகிலிருந்த மரத்தில் மோதி , வீதியை விட்டு விலகி, யுவதி மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026