2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை பிரதேசத்தில் மூன்று பைக்கெற் ஹெரோய்ன் வைத்திருந்த நபரை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, இன்று வெள்ளிக்கிழமை (4) உத்தரவிட்டார். 

திருகோணமலை நகரில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த இந்நபரை, பொலிஸார் சோதனை செய்த போது இவரிடம் ஹெரோய்ன் பைக்கெற்றுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. 

சந்தேக நபரை, திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.                         


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .