2025 மே 07, புதன்கிழமை

அரசியல் பழிவாங்கல்கள்; ஜனாதிபதியிடம் அறிக்கை கையளிப்பு

J.A. George   / 2020 டிசெம்பர் 08 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன, அந்த அறிக்கையை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் இன்று (08) முற்பகல் கையளித்துள்ளார்.

மூன்று தொகுதிகளாகவுள்ள குறித்த விசாரணை அறிக்கை 2,043பக்கங்களை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதம் 09 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X