2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

அழகிய பெண்கள் வன்கொடுமை: இருவருக்கு குற்றப்பத்திரிக்கை

Editorial   / 2023 ஒக்டோபர் 30 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில அழகிய பணிப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் இடைநிறுத்தப்பட்ட பாராளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு திணைக்கள அதிகாரிகள் இருவருக்குமான குற்றப்பத்திரிகையை கையளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம்  சமிந்த குலரத்ன கடந்த வெள்ளிக்கிழமை (27) குற்றப்பத்திரிகையை கையளித்தார்.

குற்றப்பத்திரிகையை கையளித்த பின்னர் 14 நாட்களுக்குள் குற்றச்சாட்டு தொடர்பான தன்னிலை விளக்கத்தை சமர்ப்பிக்குமாறு பதில் செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.  தன்னிலை விளக்கத்தை வழங்காவிடின்,  அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில் குறித்த இருவரிடமும் இந்தக் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டுள்ளன.

முதற்கட்ட விசாரணை அறிக்கை, பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோகணதீரவிடம், சம்பந்தப்பட்ட விசாரணைக் குழுவினால் அண்மையில் கையளிக்கப்பட்டது.

அதன் பின்னர் செயலாளர் நாயகத்தின் பணிப்புரையின் பிரகாரம் உதவி செயலாளர் நாயகம் திஹன்சன அபேரத்ன சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை ஆரம்பித்தார். இந்த முறையான விசாரணையின் இறுதி அறிக்கையும் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணையை மேற்கொண்ட விசாரணைக் குழுவின் முன்னிலையில், பாராளுமன்ற இல்ல பராமரிப்புத் திணைக்களத்தின் இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் அண்மையில் சாட்சியமளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X