2025 மே 13, செவ்வாய்க்கிழமை

இன்றுமட்டும் 96 புதிய தொற்றாளர்கள் இனங் காணப்பட்டனர்

Editorial   / 2020 மே 26 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இன்றுமட்டும் 96 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை வரலாற்றில் ஒரே நாளில் அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியமை இன்றேயாகும். 

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,278ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 712 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று இனங்காணப்பட்ட 96 கொ​ரோனா வைரஸ் தொற்றாளர்களில் 88பேர் குவைட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்; 8பேர் கடற்படை வீரர்கள் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X