Editorial / 2021 பெப்ரவரி 02 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அத்தினத்தைக் கரிநாளாகவும் கறுப்புப்பட்டி அணிந்தும் அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுத்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அடையாள உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது,
இந்தக் கரிநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம், இன்று (02) முதல் 6ஆம் திகதி வரையிலும் நான்கு நாள்களுக்கு, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்து.
கிளிநொச்சியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது அலுவலகத்தில், நேற்று (01) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் கதிர்காமநாதன் கோகிலவாணி, கருத்துரைக்கையில்.
“இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்கும் வகையில் கறுப்புப்பட்டி அணிந்து, 2ஆம் திகதி தொடக்கம் (இன்றுமுதல்) 6ஆம் திகதி வரை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது” என்றார்.
அத்துடன், நாளை 3ஆம் திகதியும் மறுநாள் 4ஆம் திகதியும், வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் எனத் தெரிவித்த அவர், இந்தப் போராட்டத்தில் பங்கேற்குமாறு,
வர்த்தக சங்கங்கள், முச்சக்கரவண்டி சங்க உறுப்பினர்கள், பஸ் உரிமையாளர் சங்க உறுப்பினர்கள், தமிழ் உறவுகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்புவிடுத்தார்.
1 hours ago
5 hours ago
9 hours ago
31 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
9 hours ago
31 Oct 2025