2025 மே 15, வியாழக்கிழமை

ஊரடங்கு சட்டம் நீடிப்பு; தளர்த்தப்படும் நேரம் தொடர்பான விவரம்

Editorial   / 2020 மார்ச் 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

24ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.

அத்துடன், ஏனைய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 23 திகதி காலை 6 மணிக்கு நீக்கப்படும்.

மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுக்கப்படவுள்ளது.

அப்பகுதிகளில் இந்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் நாட்டில் உள்ள மதுபான சாலைகளை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .