2025 மே 15, வியாழக்கிழமை

ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது

Editorial   / 2020 மார்ச் 27 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளத்தர்ப்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு ஊடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு, பின்னர் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்படும் வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .