2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கடிதத்துடன் இலங்கைக்கு வந்துள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்

Editorial   / 2019 டிசெம்பர் 02 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மகமூத் குர்ஸ்சி  (Mahmood Qureshi) 2 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக நேற்று (01) இரவு  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை  வந்தடைந்துள்ளார்.

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருடன் முக்கிய சந்திப்புகளை நடத்த உள்ளார்.

அத்துடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கடிதம் ஒன்றையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிப்பதற்கு கொண்டு வந்துள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X