Editorial / 2024 மே 19 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாமா, தம்பி, சகோதரனை கொன்று பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்த நபர் கைது செய்யப்பட்டதாக நல்லா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாலதெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று(19) அதிகாலை நான்கு மணியளவில் இந்த மனிதாபிமானமற்ற கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.
மிதிவண்டியில் பயணித்த நபரை சோதனையிட்ட பொலிஸார், அவரிடம் இருந்து சுமார் 3 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்கப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் சந்தேகநபரை கைது செய்து பொலிஸாருக்கு அழைத்துச் சென்றதாகவும், அவரிடம் இருந்த கடிதங்களை பரிசோதித்த போது, கொலைச் சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அவரது மனைவியின் மாமா, புஞ்சி மற்றும் அவர்களது குழந்தையே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
18 minute ago
21 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
21 minute ago
54 minute ago
1 hours ago