2026 மே 06, புதன்கிழமை

’கொரோனாவால் எரித்தவர்களுக்கு இழப்பீடு வழங்குக’

Nirosh   / 2021 பெப்ரவரி 27 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக் கோரி, அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், சர்வதேச அழுத்தங்களாலேயே கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்ததாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அரசியல்ரீதியாக தோற்கடிக்க சர்வதேச ரீதியில் சதி செய்யப்படுவதாகவும், அதனைத் தோற்கடிக்க தொடர்ந்து போராடுவோமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .