2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

கோரம் இல்லை: சபைக்குள் பதற்றம்: சபை ஒத்திவைப்பு

Editorial   / 2023 டிசெம்பர் 10 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தில் சற்று பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. வற்வரி தொடர்பில் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், சபையை கொண்டு நடத்துவதற்கு தேவையான உறுப்பினர்கள் இன்மையால், கோரம் கேட்கப்பட்டது. 

எதிர்க்கட்சி உறுப்பினர் நளீன் பண்டார, சபையில் கோரமில்லை என்பதை சுட்டிக்காட்டினார். இதனையடுத்து கோரமணி ஒலிக்கப்பட்டது. ஐந்து நிமிடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், ஆளும் தரப்பின் பக்கத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

சபையில் கோரம் இன்மையால், பாராளுமன்றத்தை நாளை திங்கட்கிழமை (11) காலை 9.30 வரையிலும் ஒத்திவைப்பதாககூறி, அக்கிராசனத்தில் இருந்து பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ எழுந்து சென்றுவிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X