2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

செவ்வந்தியை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

Editorial   / 2025 பெப்ரவரி 20 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய, பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். 

பெயர்:- இஷாரா செவ்வந்தி
வயது: - 25 ஆண்டுகள்
அடையாள அட்டை -  995892480
முகவரி:- 243/01, நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தை, கட்டுவெல்லேகம.

குறித்த பெண் தொடர்பான தகவல்களை கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவின்  பணிப்பாளரின் அலைபேசி இலக்கமான 071 - 8591727 அல்லது பொறுப்பதிகாரியின் 071 - 8591735 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பெண் தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்கு பணப்பரிசு வழங்க தயாராக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தகவல் வழங்குவோரின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .