2025 மே 13, செவ்வாய்க்கிழமை

புதிய கூட்டணியின் முதலாவது கூட்டம் இன்று

Editorial   / 2020 பெப்ரவரி 18 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின்  முதலாவது கூட்டம் இன்று (18) இடம்பெறவுள்ளது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகள் ஒன்றிணைந்து இந்த புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.

கூட்டணியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில், கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

பிற்பகலில் நடைபெறவுள்ள இந்தக்கூட்டத்தில்  எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில்  அதிக கவனம் செலுத்தப்படும் என கூட்டணியின் பிரதித் தவிசாளர் அமைச்சர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான விண்ணப்பம் நேற்று (17) பிற்பகல் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X