J.A. George / 2021 ஜூன் 04 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினப்புரி எல்லே தேவாலய விகாரைக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில், மூவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து காணாமல் போன மூவரையும் மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நிலையம் கூறியுள்ளது.
இதேவேளை ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் விடுத்துள்ளது.
கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் ஆபத்து காணப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள், 100 மில்லிமீட்டருக்கு மேற்பட்ட மழை பெய்யும் பட்சத்தில் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
3 minute ago
50 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
50 minute ago
2 hours ago
2 hours ago