2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

முத்தையன்கட்டு சம்பவம் - 5 இராணுவத்தினர் கைது

Freelancer   / 2025 ஓகஸ்ட் 09 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு - முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்று காணாமல் போன இளைஞன் முத்தையன் கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டள்ளார்.

காணாமல் போனவர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் , ஊரவர்களும் அப்பகுதிகளில் தேடுதல் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை காணாமல் போன இளைஞன் முத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து முல்லைத்தீவு முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் 5 இராணுவத்தினர் முல்லைத்தீவு பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X