2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மருதானையில் துப்பாக்கிச் சூடு

Editorial   / 2017 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதானை ஜயந்த வீரசேகர மாவத்தையில் இன்று (29) காலை 9.35 அளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களை இலக்கு வைத்து இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவ்விடத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X