2025 மே 07, புதன்கிழமை

முகத்துவாரத்தில் 30ஆவது மரணம்

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 07 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றினால் 30ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் எனவும் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

கொழும்பு ஐ.டி.எச்.யில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

நீரிழிவு நோயுடன், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X