Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜனவரி 24 , பி.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாரிய எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கை மின்சார சபைக்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு டீசல் மற்றும் உலை எண்ணெயை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எரிபொருள் கையிருப்புக்கேற்ப டீசல் மற்றும் உலை எண்ணெய் மின்சார சபைக்கு விநியோகிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (24) இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கூட்டுத்தாபனமும் பாரிய டொலர் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், மின்சார நெருக்கடியை சமாளிக்க வேண்டிய தேவையிருப்பதால், அசெளகரியங்களுக்கு மத்தியிலும் இந்த அளவு எரிபொருள் தொகை, மின்சார சபைக்கு வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இரண்டு வாரங்களின் பின்னர் இந்தியாவிலிருந்து சபைக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, கலந்துரையாடலில் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடம் இருந்து பெறவுள்ள 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியில் இந்த எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டவுள்ளதாக அமைச்சர் பசில் தெரிவித்துள்ளார்.
6 minute ago
12 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
34 minute ago