Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 23 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மஸ்கெலியா சாமிமலை மொக்கா பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக, லயன் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த எட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள், தோட்டப் பாடசாலையில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக, குறித்த லயன் குடியிருப்புப் பகுதியில், 30 மீற்றர் தூரம் வரையில் வெடிப்புடன் மண்சரிவு ஏற்பட்ட நிலையிலேயே, பாதுகாப்பின் நிமித்தம், இக்குடும்பங்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளன.
மேலும், மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியின் அபாயம் தொடர்பில், நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதென, மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
47 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
50 minute ago
1 hours ago