Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2021 ஜனவரி 08 , பி.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகத்துக்குள் உள்ள நினைவுத் தூபி இன்று (08) இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
நினைவுத் தூபிகள் இடித்து அழிக்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து மாணவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்கலை முன்றலில் கூடியுள்ளனர்.
யாழ்பல்கலைகழக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழிக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.
முகங்களை முழுமையாக மூடியபடி இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னிணைப்பு
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
46 minute ago
50 minute ago