2025 மே 14, புதன்கிழமை

விபத்தில் 4 விமானப்படை வீரர்கள் பலி

Editorial   / 2019 டிசெம்பர் 31 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (31) அதிகாலை 03.55 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நான்கு விமானப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

வரகாபொல பகுதியில் ஓட்டோ மற்றும் கொள்கலன் வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓட்டோ சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொள்கலன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வரகாபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .